Wednesday, June 16, 2010

காதல் பிழைப்பு..

காதல்!! இயற்கையின் ஒரு சாதாரண நிகழ்வுக்கு மனிதன் இட்டுகொண்ட நாகரீக நாமம்...
காதல் வயப்பட்டு "கவி" ஆனவர்கள் இருக்கிறார்கள்.. இந்த உலகத்தை விட்டுகாணாமல் போனவர்களும் இருக்கிறார்கள் ...
இதைவிட பிச்சைக்காரர்கள் ஆனவர்கள் பலர்... பைத்தியம் ஆனவர்கள் சிலர்....  ஒரு சிலர் கோடீஸ்வரர்களும் ஆகியிருக்கிறார்கள்...  பின்னே...!! அம்பானி பெண்ணை அணைக்க தெரிஞ்சா போதாதா சீவியத்துக்கும் மாமனார் சொத்தில குப்பை கொட்ட....ஒரு விதத்தில் காதல் ஒரு முதலீடு !! இங்கு காசு அல்ல மனசு முதலீடு செய்யப்படுகிறது !!
ஆக .. காதல் புனிதமானது மனசு சம்பந்தப்பட்டது என்பதெல்லாம் உள்ளே ஒழிந்திருக்கும் காமத்தை மறைக்கும் கந்தல் துணிகள் ...
அத்தனை மனித உறவுகளும் ஏதோ ஒரு தேவையில்தான் இணைந்திருக்கின்றன.. காதல் மட்டும் விதிவிலக்கா என்ன...

காதல் பிழைப்பு..
எத்தனை காலமாய்
படிக்கின்ற பாடம் ஒன்று 
பரீட்சை என்று வந்தால்.. பயம் !!
காதல் !!

ஒரு நொடியிலும் இடி விழும்.
ஒரு வருடம் கழித்தும் பதில் வரும்.
முட்டையோ !! நூறோ !!
இடையில் நட்பாய் இருப்போம் என்று
நாற்பதோ ! ஐம்பதோ !
முடிவில் நாறப்போவது நம் பிழைப்புத்தான் !!

ஆசை யாரை விட்டது
வாங்கிய முட்டைகள் பொரித்த
குஞ்சுகளின் கூவலில்
கவிதை எழுதிக்கொண்டு..
அடுத்த பரீட்சைக்கு
ஆயத்தமாகும் நெஞ்சங்கள் !!

***********************************************

அழகிய ஆப்பிள்கள் !!
எந்தபழம் எட்டுகிற உயரத்தில் ??
பார்த்து கணிக்க முடிவதில்லை ..
பறிக்க பாய்ந்து பாய்ந்து.. ...
பாதம் நொந்த பிறகும்.
அந்த பரவசம் விடுவதில்லை !!

 **********************************************

கருத்துக்களை விட்டு விடுங்கள் .. கவிதை பிடித்திருந்தால் உங்கள் அன்பான வாக்குகளை அளிக்க மறவாதீரகள்..
ப்ரியமுடன்

த.கரன்






0 comments:

Post a Comment