Friday, June 11, 2010

கூழாங்கல் பயணம் ....

ஒரு மலைச்சரிவில் கூழாங்கற்களாய் !!
உருண்டோடிக்கொண்டிருக்கிறது ...
ஒவ்வொருவரின் வாழ்வும் !!

பாதை நிர்ணயிக்கப்பட்டது
கரடு முரடாய்..

பயணம் இதுவரை ..
பாதையிலும்
பக்கத்து ஓடும் பாறாங்கற்களுடனும்.
மொத்துண்டு மோதுண்டு
மனசெல்லாம் பட்ட காயம்
காலத்தோடு ஆறிப்போய்..

அந்தரத்தில் பறந்த  - அந்த
சில நாள் சந்தோசம்..
உந்தி தள்ளி மேலும் உருட்டி விட

மீண்டும் எங்கோ வீழ்ந்து சிதறி!!
ஆறிப்போன வடுக்களும்..
ஆழமாய் வலி எடுக்க.

தொடரும் ஓட்டத்தில்...
தோள் கொடுத்த கற்கள் சில
பாதி பயணத்தில்
பள்ளத்துள் விழுந்து விட..

அந்த
நினைவுகளை சுமந்தபடி..
தொடரும் என் பயணம்..
எங்கோ வெட்டப்படிருக்கும்
என் குழியை நோக்கி !

கரன் ..

0 comments:

Post a Comment