Thursday, July 1, 2010

பிரம்மனுக்கு ஒரு கண்டனம்

வாடைக்காற்று வரிந்து கட்டிக்கொண்டு வீசிக்கொண்டிருக்க அதை ஆக்ரோசமாக கிழித்தபடி ஒரு மோட்டார் வண்டியில் நான். ஓரத்தில் கிடந்த புழுதிகளை எல்லாம் அள்ளி கொணாந்து மூஞ்சியில் வீசிய காற்றை முறைத்து விட்டு ஹெல்மட்டின் கண்ணாடியை இழுத்து மூடச்சென்ற கைகள் போனபாதையில் பாதியில் நின்று திரும்பி வந்தன. காரணம் விழிகளிலிருந்து ஒரு கட்டளை போயிருந்தது. முன்னால் "ஒரு தேவதை ஒன்று தெருவில் வருகிறது" என்று எங்கோ வாசித்த கவிதை ஒன்றை நினைவு படுத்தியபடி புழுதி வீழ்ந்த வலியை கூட பொறுத்தபடி கண்கள் அழகுப்பசியெடுத்து ஒரு காவாலித்தனம் பண்ணிக்கொண்டிருந்தன. 

தெருவில் கலைந்து கொண்டிருந்த புழுதிகளினூடு ஒரு உருவம் கலந்து வந்து கொண்டிருந்தது, சட்டென என் வேகம் குறைய சந்தோஷ் சிவனின் கமெராவாக மாறிய கண்கள் அந்த காட்சிகளை எல்லாம் களவாக ஒளிப்பதிவு செய்துகொண்டிருக்க மூளை ஒவ்வொரு பிரேம்களையும் பத்திரமாக பதிவு செய்து கொண்டிருந்தது.

அவள் கடந்து போன அந்த சில வினாடிகளில் கொஞ்சம் நிலைதடுமாறிப்போனது நெஞ்சம். சினிமாப்படத்து ஹீரோக்கள்  போல பின்னாலே போடா!!  என்று மனசு சொல்ல... புத்தியோ "போடா புண்ணாக்கு.." என்று வண்டியை நேரே செலுத்த...  மெதுவாக நகர்ந்த வண்டியில்.. புத்தியால் புறக்கணிக்கப்பட்டு கலைக்கப்பட்ட எத்தனையாவது காதல் கரு.. இது....?  என்றவாறு மனம் ஒரு பெருமூச்சு விட்டபடி உள்ளே அடங்கி அந்த அழகியின் சில வினாடி  நினைவுகளை அசைபோட ஆரம்பித்தது.

அவள் என்ன வண்ண்ணம் என்று இன்னும் மூளைக்கு பகுக்க தெரியவில்லை அமைதியாக இருந்த அந்த அழகிய வண்ண முகம் ஒரு சின்னஞ்சிறு புன்னகை மட்டும் அணிந்திருக்க அவளை ஒரு சிவப்பு வண்ண ரீ சேர்ட்டும் நீல ஸ்கேர்ட்டும் அன்போடு இறுக அணைத்திருந்தன கொடுத்து வைத்த புடவைகள் என்று அலுத்துகொண்டது மனம்... தெளிவாக வரையப்பட்டிருந்த அவள் உருவத்தின் விளிம்புகளில் அறுபட்டுப்போன  என் இதயத்தில் எங்கெல்லாமோ வலி எடுக்க வைத்தவள் செலுத்திக்கொண்டிருந்த ..சைக்கிளுக்கு கூட வலி எடுக்காமல் மிதித்துக்கொண்டிருக்க... அவள் கால்களின் அசைவில் கசங்கிப்போன மனதை இழுத்து நிமிர்த்தி இருப்பிடம் சேர்ந்த எனக்கு.... 

உன்மேல்தான்  ஆத்திரம் பிரம்மா இப்படி அழகாக பெண்களை படைக்காதே இல்லையேல் மனிதனுக்கு கண்களை படைக்காதே வௌவ்வால் போல அதிர்வுகளை வைத்து அசையக்கூடியவாறு படைத்து விடு இந்த கண்களால்தான் காதலும் கத்திரிக்காயும் கவிதைகளும்.

இவ்வளவு நேரமும் என் குசும்பை ரசித்த உங்களுக்கு என் ஆறுதல் பரிசு இந்த ஐசின் படம் மறக்காமல் கருத்து காணிக்கை செலுத்தி விட்டு செல்லுங்கள்.


0 comments:

Post a Comment