Friday, July 9, 2010

உள்ளத்தின் உளறல்கள் - 1

உயிரை விட்டு
உடலை உதறி விட்டு செல்ல
வெறும் போர்வை அல்ல
வாழ்க்கை ஒரு கவசம்
பொறுக்க முடியாத பொழுதுகளின் அவிச்சலில்
உள்ளே புளுங்கி மனசு திணறினாலும்
அறுத்து விடமுடியாதபடி
இறுக்கப்பட்டிருக்கிறது
உறவுகளாலும் உணர்வுகளாலும்

**************************************************

விலைக்கு வாங்க முடியாதது
உலகில் அதிஸ்டம் ஒன்றுதான்
பணம் இருந்தால்
பாசமும் தேடிவரும்- இங்கு
உறவுகளின் சந்தைகளில் கூட
போலிகள் மலிவுதான் !!

*************************************************

சிந்திக்க தெரியாமல் இருப்பதே
சிலவேளைகளில் சிறப்பு
சில தப்புகள் மூளைக்கு தென்பட்டு
மனசை சாகடிப்பதை விட - எதையும்
சிந்திக்க தெரியாமல் இருப்பதே சிறப்பு

************************************************

எத்தனை தடவை சொல்லியும்
கேட்பதில்லை மனசு
நெருப்புக்குள் போராட மறுக்கிறது
நிழல் தேடி ஓடுகிறது - கேட்டால்
கௌரவமான வாழ்வு எதற்கு
நிம்மதி போதும் என்கிறது ???