Tuesday, June 8, 2010

வணக்கம் !! - வாழ்க்கை..!!

விடுகதை போன்ற இந்த வாழ்க்கையைப்போல சுவாரஸ்யமான திரைக்கதை வேறு எதுவும் கிடையாது ஒவ்வொரு நாளும் விதம் விதம் திருநாளோ  ..?  சினநாளோ..? யார் கண்டார்...! புதிய புதிய பாத்திரங்கள் புதுமையான மனிதர்கள் மலைக்கவைக்கும் திருப்பங்கள் நம்பமுடியாத நாடகங்கள் என வருடக்கணக்காக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் எங்கள் வாழ்க்கை. முடிந்து போன ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அத்தியாயம்..! விடியப்போகும் ஒவ்வொரு.. நாளை’யும் ஒவ்வொரு புதிர்..!

ஆண்டாண்டு காலமாய் அரங்கேறி மேடையில் ஓடிக்கொண்டிருக்கிறது நாடகம் நாம் புதிய பாத்திரம் இடையில் வந்து விழுகிறோம்  எதுவுமே எம் கையில் இல்லை எழுதப்பட்ட தலைவிதியில் திரைக்கதை எம்பங்கை நடித்து முடிக்க வேண்டியதுதான் ... மிச்சம் ! நம் கதை முடிந்த பின்னும் நாடகம் தொடரும்...

ஆனால் இருக்கும் மட்டும் நாங்கள் கதாநாயகர்கள்  எங்கள் சினிமாவை  நாங்கள் மட்டுமே மீண்டும் மீண்டும் பார்க்கிறோம். பத்து வினாடிகள் பத்து வருடங்களாக பத்து வருடங்கள் பத்து வினாடிகளாக பறந்து போக எஞ்சி இருப்பவை நினைவுகள் மட்டுமே.  சில அசை போட்டுப்பார்க்க ஆனந்தமாக இருக்கும் சில வேதனையின் விம்பங்களாக இருக்கும் எல்லாம் கதைகளை எழுதும் காலந்தான் தீர்மானிக்கிறது. காலந்தான் உலகத்தின் சிறந்த கதாசிரியன் எனபது கதையை திரும்பி பார்க்கும் போதுதான் தெள்ளென புரிகிறது..!.
காலம் எழுதிய கதைகளில் காயம்பட்ட இதயங்கள் அந்த நினைவுகளுடன் கலந்து நிற்கும் வரை துடித்து கொண்டிருக்கும்.

சிலருக்கு வாழ்க்கை ஒரே சீராக செல்லும்..!   மணிரத்னம் படம்… சிலரது கதையோ.. விஜய்படம்..?   திடீர் திடீர் திருப்பங்கள் தான் வாழ்க்கை.. அடிக்கடி சீ..?  என்ன வாழ்க்கை இது..? ஏன் வந்தோம் …? என்று  இருக்கையை விட்டு எயுந்து போகச்சொல்லும் … இடையில் விட்டு போனவர்களும் சிலர்..? சகித்து கொண்டு சரி .! வந்திட்டம் வாழ்ந்து துலைப்பம் என்று இருப்பவர்கள் பலர்…!
நீங்கள் எந்த ரகம்..???

உலகத்தில் எட்டு அதிசயங்கள் என்பது எவ்வளவு முட்டாள்தனம் என்று சிலவேளை தோன்றுகிறது ஒவ்வொரு மனிதனும் அதிசயமாய் தெரிகிறான் எனக்கு  ஏன் சிலவேளை ஒவ்வோரு உயிர்களும் அதிசயமாய் தெரிகிறது !! என்னதான் படைச்சி கொட்டினாலும் பிரமனை அடிக்க பில்கேட்ஸோ ஸ்டீவ்ஜாப்ஸோ யாராலும் முடியாது.

இயற்கையின் படைப்பில்.. உயிர்களில் பேதம் கிடையாது !! ஒவ்வொரு நாளும் ஓராயிரம் உயிர்கள் மாண்டு கொண்டிருக்க மனிதன் சாவது மட்டும் ஒரு கணக்கல்ல ஆனால் ... மனிதம் மாண்டு கொண்டிருக்கிறது இங்கே .. மனங்கள் சாகடிக்கபடுகின்றன...  உயிருள்ள பிணங்கள்தான் பல உலாவிதிரிகின்றன.. இன்றைய உலகத்தில்..!!




2 comments:

பனித்துளி சங்கர் said...

///////காலம் எழுதிய கதைகளில் காயம்பட்ட இதயங்கள் அந்த நினைவுகளுடன் கலந்து நிற்கும் வரை துடித்து கொண்டிருக்கும்.////


மிகவும் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் . பகிர்வுக்கு நன்றி

த.கரன் said...

நன்றி சங்கர் புதியவன் தானே...பழகிக்கொள்ள பல இருக்கின்றது போல...

Post a Comment